திங்கள், 17 ஜனவரி, 2011

"தமிழகத்தின் அடுத்த ஆட்சியில் முக்கியம்:யார் வர கூடாது என்பது தான்" தமிழருவி மணியன்

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் 


"என்ன செய்யலாம் இதற்காக?"   நூல் வெளியீட்டு விழா ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெற்றது. 


எழுத்தாளர் செயப்பிரகாசம்,  திரு.நெடுமாறன், திரு.தமிழருவி மணியன், இயக்குனர் திரு.மணிவண்ணன் , நடிகர்திரு. நாசர், நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன். சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் திரு.வேல் முருகன்,பேராசிரியை. செல்வி,  திரு.நிமல்கா பெர்ணான்டோ,  மற்றும் பலர் கலந்துகொண்டனர் .


இவ்விழாவில் பேசிய அனைத்து தலைவர்களும், ஈழ போரில் தமிழக திமுக ஆட்சி மற்றும் மத்திய காங்கிரஸ் ஆட்சியின் துரோகம் மற்றும் சிங்கள படையின் வெறித்தனம் பற்றி எடுத்துரைத்தனர்.


அவற்றின் காணொளி இங்கே காண கிடைக்கிறது
 http://www.youtube.com/user/pandri5000.


இவ்விழாவில் தமிழருவி மணியனின் பேச்சு மிக சுவாரசியமானது.


நாம் தமிழர் இயக்கம் இப்போது இலக்கை தீர்மானித்து விட்டது போலவே தெரிகிறது.



தமிழருவி மணியனின் பேச்சு அதை சரியாகவே பிரதிபலிக்கிறது.


தெள்ள தெளிவாக சொன்ன விஷயம்:


தமிழகத்தின் அடுத்த ஆட்சியில் யார் வர வேண்டும் என்பது முக்கியம் அல்ல. யார் வர கூடாது என்பது தான். 


இலக்கு:  திமுக, கருணாநிதி, காங்கிரஸ், சோனியா.

இதற்காக அவர் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமைக்கு ஒரு நியாயமான கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
சில பல சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டு வைக்காதீர்கள் என்று.

அந்த காணொளி:


எப்போதும் உண்மை சுடும். 

அது போல மணியன் எடுத்துரைத்த சில உண்மைகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் சுடுமா என்று பார்க்க வேண்டும். 

எதிர்பார்ப்புடன் 

லகுட பாண்டி 

சனி, 8 ஜனவரி, 2011

இந்த விளம்பரங்கள் ஆணாதிக்கத்தை போதிக்கிறதா??????

நம்மால் முடிந்தது.....

ஒரு திரியை பற்ற வைக்கிறேன்......

 LAVA A 10



பழைய காலத்திலே ஒரு பொருளை வாங்கணும்னா, அதுக்கு நிறம், குணம், மணம் ஆகிய மூன்று ரோஜாக்களோட, விலை, பராமரிப்பு தேவைகள் உட்பட சில முட்களையும் அலசி ஆராய்ந்து வாங்கிய பழக்கம் கொண்டவர்கள் நாம்.

ஆனா இன்னிக்கு,

ஒரு மொபைல் வாங்கினா, அதனால கிடைக்க போறது என்னனு மேலே உள்ள விளம்பரம் சொல்லிருக்கும்.

கட்டிளம் காளைகள் இந்த மொபைல் வாங்கி இந்த மாதிரி சில பிகர்களோட நட்பையும்..பாசத்தையும்..இன்னும் என்னன்ன முடியமோ எல்லாத்தையும் பகிர்ந்துக்கங்கப்பா........

இனி ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு....

ஒரு சீரியஸ் கேள்வி..

இந்த விளம்பரம் பறைசாற்றும் கருத்து என்ன?

பத்த வைச்சாச்சு.... பிச்சுக்கறேன்............



ரகளையாய் கலாய்...

லகுட பாண்டி