சமீபத்தில் (டிசம்பர் 2010 ல் தாங்க), தேளின் மன்மதன் அம்பு பற்றிய விமர்சனத்தையும், அதில் இருக்கும் கமல் பற்றிய கருத்துகளை பற்றியும் தான் இந்த பதிவு.
முதலில் சிறுத்தை ட்ரைலர்
அடுத்து விக்ரமற்குடு ட்ரைலர்
இதில் ரவிதேஜா போட்டிருக்கும் காக்கி சீருடைக்கும், கார்த்தி போட்டிருக்கும் காக்கி சீருடைக்கும் வித்தியாசம் உள்ளது, எனவே கதை என்னுடையது என்று "சிறுத்தை"யின் இயக்குனர் சிவா காப்பி ரைட்ஸ் வாங்காமல் சொல்லமுடியுமா?
அப்படி சொன்னால் விக்ரமற்குடுவின் கிளைமாக்சில் " நீஈஈஈஈஇ யப்பாஆஆஆஆ " என்று சொல்லிகொண்டே ஒரு பெண் எட்டி உதைப்பதை போல விக்ரமற்குடுவின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி எட்டி உதைப்பார்.
அந்த மாதிரி எட்டி உதைக்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் தான் கமல்,மணிரத்னம், மிஷ்கின், அமீர் இத்யாதிகள் திருடுகிறார்களா?
இதில் கமலுக்கு நல்ரசனை பற்றிய வியாக்கியானம் வேறு.
கொஞ்சமும் கூச்சமில்லாமல் திருடும் இவர்களை என்ன சொல்வது?
நல்ரசனை:
"மக்களோட மனசுல" என்று ஆரம்பிக்கும் அந்த வசனம் ரொம்ப அருமை.
இப்போ நம்மளோட ரீமேக்:
" நூறு பேர் நம்ம பிளாக்கை படிக்கனும்னா, நூறு பதிவு போடணும்னு அவசியம் இல்லை"
"ஒரு பதிவு போட்டா போதும்"
"அந்த பேர்"
"அந்த மொக்கை"
"பாண்டி.......லகுட பாண்டி"
"அது போதும்"
டிஸ்கி:
தேளின் பெயரை இந்த பதிவின் தலைப்பில் போட்டதால் அவருக்கும் தனியாக இப்பதிவு மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளது.
தேள், உங்களுக்கு விருப்பமில்லாவிடின் உடனடியாக நீக்கப்படும்
வியாழன், 30 டிசம்பர், 2010
செவ்வாய், 28 டிசம்பர், 2010
வலி
மூளையில் உரைத்த போது,
சுருக்கென்று தைத்தது அந்த வலி.
"அவருக்கா"
அவர் " அழகுராஜ் "
அவனுக்கு அவரை அதிகம் பிடிப்பதில்லை.
ஆனாலும் மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.
அவர் ஒன்னும் அப்படி ஒரு பெரிய எதிரி அல்ல.
உண்மையை சொல்வதானால் அவர் தான் அவனுக்கு ஆதர்சனம்.
பல விஷயங்களில். குறிப்பாய் தொழிலில்.
ஒரு அரசாங்க அதிகாரியாய் இருந்தும் அவர் மேஜையில், கிடப்பில் கோப்புகளை பார்த்ததாய் நினைவில் இல்லை. தன்னை தேடி வரும் எவரிடமும் அவர் "இல்லை" என்று சொன்னதே இல்லை.
எப்பொழுதும் அவரை சுற்றி ஒரு கும்பல் இருக்கும். இப்பொழுதும் இருக்க தான் செய்கிறது.
அவரை போலவே எல்லா விஷயங்களிலும் இருக்க முற்பட்டான் புகை பிடித்தலையும் சேர்த்து
பதின்ம வயதுகளில் முதலாவதாக தான் மனைவியாரின் மகன் அல்ல துணைவியாரின் மகன் என்று தெரிந்த போது மெல்ல அவரிடம் இருந்து விலகினான்.
அவர் மேல் மெல்ல ஒரு இனம் தெரியாத விரோதம் அவனுக்குள் வளர ஆரம்பித்தது. .
அவர் செய்த அதே தவறை, புகை பிடித்ததை அவர் கண்டித்த போது அவரை பார்த்து " நீ யோக்கியமா? " என்று உதடுகள் கேட்க துடித்து மௌனமானான்.
தன முதல் உத்தியோக்மாய் பம்பாய் போன போது
" நமசிவாயம் சொல்றத கேட்டு செய்." என்று தன் அண்ணனின் சொல்படி நடக்க சொன்ன போது வெறுப்பு கூடியது.
நமசிவாயம் - மனைவியாரின் மகன். சிறய அளவு வேற்றுமைகளும், மனஸ்தாபங்களும் அவர்களுக்குள் இருந்த சமயம். பம்பாய் அதை எல்லாம் சுத்தமாக துடைத்தெறிந்தது.
ஒற்றுமையான சகோதர்கள் ஆனார்கள். ஆயினும் அவரின் மீதிருந்த வெறுப்பு மட்டும் சற்றும் குறையவில்லை.
வீடு திரும்பி சொந்த தொழில் தொடங்கிய போது " என்னமோ செய் " என்று சொன்னார். வெறுப்பு விரோதம் ஆனது. அதே தொழில் ஊத்தி மூடி கொண்ட போது அவரின் மீது காட்டமான கோபம் இருந்தது.
பிழைப்புக்காக சிங்கை.
அன்று வார விடுமுறையின் சோம்பல் காலை தூக்கத்தில் அலைபேசி கதறியது.
மலேசியாவிலிருந்து நமசிவாயம் லைனில் பதறினான்.
முடிக்கமுடியாமல் தேம்பினான்.
" டேய் அப்பாவுக்கு ஹார்ட் அட்டகாம்" என்று.
மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.
" அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் "
இது ஒரு புனைவு அப்படின்னு ஓவரா பில்டப் எல்லாம் இல்லை.
திடீர்னு ஒரு கதை எழுதலாம்னு தோனுச்சு.
அதான்.
நட்புடன்
லகுட பாண்டி
சுருக்கென்று தைத்தது அந்த வலி.
"அவருக்கா"
அவர் " அழகுராஜ் "
அவனுக்கு அவரை அதிகம் பிடிப்பதில்லை.
ஆனாலும் மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.
அவர் ஒன்னும் அப்படி ஒரு பெரிய எதிரி அல்ல.
உண்மையை சொல்வதானால் அவர் தான் அவனுக்கு ஆதர்சனம்.
பல விஷயங்களில். குறிப்பாய் தொழிலில்.
ஒரு அரசாங்க அதிகாரியாய் இருந்தும் அவர் மேஜையில், கிடப்பில் கோப்புகளை பார்த்ததாய் நினைவில் இல்லை. தன்னை தேடி வரும் எவரிடமும் அவர் "இல்லை" என்று சொன்னதே இல்லை.
எப்பொழுதும் அவரை சுற்றி ஒரு கும்பல் இருக்கும். இப்பொழுதும் இருக்க தான் செய்கிறது.
அவரை போலவே எல்லா விஷயங்களிலும் இருக்க முற்பட்டான் புகை பிடித்தலையும் சேர்த்து
பதின்ம வயதுகளில் முதலாவதாக தான் மனைவியாரின் மகன் அல்ல துணைவியாரின் மகன் என்று தெரிந்த போது மெல்ல அவரிடம் இருந்து விலகினான்.
அவர் மேல் மெல்ல ஒரு இனம் தெரியாத விரோதம் அவனுக்குள் வளர ஆரம்பித்தது. .
அவர் செய்த அதே தவறை, புகை பிடித்ததை அவர் கண்டித்த போது அவரை பார்த்து " நீ யோக்கியமா? " என்று உதடுகள் கேட்க துடித்து மௌனமானான்.
தன முதல் உத்தியோக்மாய் பம்பாய் போன போது
" நமசிவாயம் சொல்றத கேட்டு செய்." என்று தன் அண்ணனின் சொல்படி நடக்க சொன்ன போது வெறுப்பு கூடியது.
நமசிவாயம் - மனைவியாரின் மகன். சிறய அளவு வேற்றுமைகளும், மனஸ்தாபங்களும் அவர்களுக்குள் இருந்த சமயம். பம்பாய் அதை எல்லாம் சுத்தமாக துடைத்தெறிந்தது.
ஒற்றுமையான சகோதர்கள் ஆனார்கள். ஆயினும் அவரின் மீதிருந்த வெறுப்பு மட்டும் சற்றும் குறையவில்லை.
வீடு திரும்பி சொந்த தொழில் தொடங்கிய போது " என்னமோ செய் " என்று சொன்னார். வெறுப்பு விரோதம் ஆனது. அதே தொழில் ஊத்தி மூடி கொண்ட போது அவரின் மீது காட்டமான கோபம் இருந்தது.
பிழைப்புக்காக சிங்கை.
அன்று வார விடுமுறையின் சோம்பல் காலை தூக்கத்தில் அலைபேசி கதறியது.
மலேசியாவிலிருந்து நமசிவாயம் லைனில் பதறினான்.
முடிக்கமுடியாமல் தேம்பினான்.
" டேய் அப்பாவுக்கு ஹார்ட் அட்டகாம்" என்று.
மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.
" அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் "
இது ஒரு புனைவு அப்படின்னு ஓவரா பில்டப் எல்லாம் இல்லை.
திடீர்னு ஒரு கதை எழுதலாம்னு தோனுச்சு.
அதான்.
நட்புடன்
லகுட பாண்டி
திங்கள், 13 டிசம்பர், 2010
ஸ்பெக்ட்ரம், வீட்டு வசதி வாரியத்தின் ஒதுக்கீடு........இன்னும் என்ன என்ன?????
ரெண்டு மாசம் ஊருக்கு விடுமுறையில போய் நிம்மதியா இருக்கலாம்னு போனேன்.
போன எடத்துல ஒரே மழை.
கடலூர் நெஜமாவே கடல் ஊரா மாறி இருந்தது.
கடத்தெருனு ஒரு சொல்லாடல் உண்டு எங்க ஊர்ல....
மார்க்கெட்...சந்தை...முக்கியமான வியாபார தெருவை தான் நாங்க கடத்தெருனு சொல்வோம்.
இந்த முறை போனப்ப கடைத்தெரு கடல் தெருவா மாறி இருந்தது.
திரும்பிய இடமெல்லாம் நீர்.
அளவுக்கு மிஞ்சிய அமிர்தமாய்..........
ரசிக்க முடியாத அளவில்...............
அதை விட கொடுமை.............
உள்ளூர் நகராட்சி பற்றி நாளேடுகளில் கிழித்து எரிந்தும் சற்றும் அலட்டி கொள்ளாத அதன் உறுப்பினர்கள், ஊழியர்கள்.........
சரி அவர்கள் இருக்கும் ஏரியா நல்லா இருக்கானு பாத்தா அதுவும் இல்ல.
ஒரு நாளைக்கு கொறஞ்சபட்சம் ஒரு ஆக்சிடென்ட், இந்த பாதாள சாக்கடை திட்டத்தால.............
டிவியா போட்டா ஸ்பெக்ட்ட்ரம் ........
வீடு ஒதுக்கிய பிரச்சினை.............
நிரா ராடியா........கனிமொழி...........ராசா............ராஜாத்தி அம்மா.............டாட்டா.........தாத்தா(கலைஞர்).....................
உருப்புடுவாங்க? இந்த நல்லவங்க எல்லாம்..................
இவங்க, தான் அழியறதோட மக்களையும் சேத்து அழிச்சிட்டாங்க....
மக்களுக்கு அந்த மழை நீர், சரியில்லாத ரோடு பத்தி எல்லாம் பெரிய கவலை இல்லாத மாதிரி தான் தெரிது..............
வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவ ரெடியா இருக்காங்க போல.
நெஞ்சு எரிஞ்சுது. மொத ஒரு வாரம்.
அதுக்கப்புறம்.......
நானும் அமைதியா இதுவும் கடந்து போகும்னு சொல்லிட்டு எம் மக்களை போலவே
" வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவ " ரெடிஆயிட்டேன்.
பதினோரு மணிக்கு டாஸ்மாக்கில் கள்ள சரக்கு வாங்கி குடிச்சிட்டு மீதி நாட்களை கடந்து வெற்றிகரமாக விடுமுறை கழித்து வாகையுடன் திரும்பி விட்டேன்.........
ஊரில் நல்ல ரோடு போட முடியாத குறையை கத்தாரில் போக்கி கொண்டிருக்கிறேன்.
அனுபவமா........சிறுகதையா............வயித்தெரிச்சலா............எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்..........
வேதனையுடன்
----லகுட பாண்டி.
போன எடத்துல ஒரே மழை.
கடலூர் நெஜமாவே கடல் ஊரா மாறி இருந்தது.
கடத்தெருனு ஒரு சொல்லாடல் உண்டு எங்க ஊர்ல....
மார்க்கெட்...சந்தை...முக்கியமான வியாபார தெருவை தான் நாங்க கடத்தெருனு சொல்வோம்.
இந்த முறை போனப்ப கடைத்தெரு கடல் தெருவா மாறி இருந்தது.
திரும்பிய இடமெல்லாம் நீர்.
அளவுக்கு மிஞ்சிய அமிர்தமாய்..........
ரசிக்க முடியாத அளவில்...............
அதை விட கொடுமை.............
உள்ளூர் நகராட்சி பற்றி நாளேடுகளில் கிழித்து எரிந்தும் சற்றும் அலட்டி கொள்ளாத அதன் உறுப்பினர்கள், ஊழியர்கள்.........
சரி அவர்கள் இருக்கும் ஏரியா நல்லா இருக்கானு பாத்தா அதுவும் இல்ல.
ஒரு நாளைக்கு கொறஞ்சபட்சம் ஒரு ஆக்சிடென்ட், இந்த பாதாள சாக்கடை திட்டத்தால.............
டிவியா போட்டா ஸ்பெக்ட்ட்ரம் ........
வீடு ஒதுக்கிய பிரச்சினை.............
நிரா ராடியா........கனிமொழி...........ராசா............ராஜாத்தி அம்மா.............டாட்டா.........தாத்தா(கலைஞர்).....................
உருப்புடுவாங்க? இந்த நல்லவங்க எல்லாம்..................
இவங்க, தான் அழியறதோட மக்களையும் சேத்து அழிச்சிட்டாங்க....
மக்களுக்கு அந்த மழை நீர், சரியில்லாத ரோடு பத்தி எல்லாம் பெரிய கவலை இல்லாத மாதிரி தான் தெரிது..............
வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவ ரெடியா இருக்காங்க போல.
நெஞ்சு எரிஞ்சுது. மொத ஒரு வாரம்.
அதுக்கப்புறம்.......
நானும் அமைதியா இதுவும் கடந்து போகும்னு சொல்லிட்டு எம் மக்களை போலவே
" வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவ " ரெடிஆயிட்டேன்.
பதினோரு மணிக்கு டாஸ்மாக்கில் கள்ள சரக்கு வாங்கி குடிச்சிட்டு மீதி நாட்களை கடந்து வெற்றிகரமாக விடுமுறை கழித்து வாகையுடன் திரும்பி விட்டேன்.........
ஊரில் நல்ல ரோடு போட முடியாத குறையை கத்தாரில் போக்கி கொண்டிருக்கிறேன்.
அனுபவமா........சிறுகதையா............வயித்தெரிச்சலா............எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்..........
வேதனையுடன்
----லகுட பாண்டி.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)