செவ்வாய், 28 டிசம்பர், 2010

வலி

மூளையில் உரைத்த போது,


சுருக்கென்று தைத்தது அந்த வலி.

"அவருக்கா"
 
 அவர் " அழகுராஜ் "


அவனுக்கு அவரை அதிகம் பிடிப்பதில்லை.

ஆனாலும் மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.

அவர் ஒன்னும் அப்படி ஒரு பெரிய எதிரி அல்ல.

உண்மையை சொல்வதானால் அவர் தான் அவனுக்கு ஆதர்சனம்.

பல விஷயங்களில். குறிப்பாய் தொழிலில்.

ஒரு அரசாங்க அதிகாரியாய் இருந்தும் அவர் மேஜையில், கிடப்பில் கோப்புகளை பார்த்ததாய் நினைவில் இல்லை. தன்னை தேடி வரும் எவரிடமும் அவர் "இல்லை" என்று சொன்னதே இல்லை.

எப்பொழுதும் அவரை சுற்றி ஒரு கும்பல் இருக்கும். இப்பொழுதும் இருக்க தான் செய்கிறது.

அவரை போலவே எல்லா விஷயங்களிலும் இருக்க முற்பட்டான் புகை பிடித்தலையும் சேர்த்து

பதின்ம வயதுகளில் முதலாவதாக தான் மனைவியாரின் மகன் அல்ல துணைவியாரின் மகன் என்று தெரிந்த போது மெல்ல அவரிடம் இருந்து விலகினான்.

அவர் மேல் மெல்ல ஒரு இனம் தெரியாத விரோதம் அவனுக்குள் வளர ஆரம்பித்தது. .

அவர் செய்த அதே தவறை, புகை பிடித்ததை அவர் கண்டித்த போது அவரை பார்த்து " நீ யோக்கியமா? " என்று உதடுகள் கேட்க துடித்து மௌனமானான்.

தன முதல் உத்தியோக்மாய் பம்பாய் போன போது

" நமசிவாயம் சொல்றத கேட்டு செய்." என்று தன் அண்ணனின் சொல்படி நடக்க சொன்ன போது வெறுப்பு கூடியது.

நமசிவாயம் - மனைவியாரின் மகன். சிறய அளவு வேற்றுமைகளும், மனஸ்தாபங்களும் அவர்களுக்குள் இருந்த சமயம். பம்பாய் அதை எல்லாம் சுத்தமாக துடைத்தெறிந்தது.

ஒற்றுமையான சகோதர்கள் ஆனார்கள். ஆயினும் அவரின் மீதிருந்த வெறுப்பு மட்டும் சற்றும் குறையவில்லை.

வீடு திரும்பி சொந்த தொழில் தொடங்கிய போது " என்னமோ செய் " என்று சொன்னார். வெறுப்பு விரோதம் ஆனது. அதே தொழில் ஊத்தி மூடி கொண்ட போது அவரின் மீது காட்டமான கோபம் இருந்தது.

பிழைப்புக்காக சிங்கை.


அன்று வார விடுமுறையின் சோம்பல் காலை தூக்கத்தில் அலைபேசி கதறியது.

மலேசியாவிலிருந்து நமசிவாயம் லைனில் பதறினான்.
முடிக்கமுடியாமல் தேம்பினான்.

" டேய் அப்பாவுக்கு ஹார்ட் அட்டகாம்" என்று.

மனதில் முள்ளாய் தைத்தது அந்த வலி.

 
" அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் "

 
இது ஒரு புனைவு அப்படின்னு ஓவரா பில்டப் எல்லாம் இல்லை.
 
திடீர்னு ஒரு கதை எழுதலாம்னு தோனுச்சு.


அதான்.

நட்புடன்


லகுட பாண்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக