ரெண்டு மாசம் ஊருக்கு விடுமுறையில போய் நிம்மதியா இருக்கலாம்னு போனேன்.
போன எடத்துல ஒரே மழை.
கடலூர் நெஜமாவே கடல் ஊரா மாறி இருந்தது.
கடத்தெருனு ஒரு சொல்லாடல் உண்டு எங்க ஊர்ல....
மார்க்கெட்...சந்தை...முக்கியமான வியாபார தெருவை தான் நாங்க கடத்தெருனு சொல்வோம்.
இந்த முறை போனப்ப கடைத்தெரு கடல் தெருவா மாறி இருந்தது.
திரும்பிய இடமெல்லாம் நீர்.
அளவுக்கு மிஞ்சிய அமிர்தமாய்..........
ரசிக்க முடியாத அளவில்...............
அதை விட கொடுமை.............
உள்ளூர் நகராட்சி பற்றி நாளேடுகளில் கிழித்து எரிந்தும் சற்றும் அலட்டி கொள்ளாத அதன் உறுப்பினர்கள், ஊழியர்கள்.........
சரி அவர்கள் இருக்கும் ஏரியா நல்லா இருக்கானு பாத்தா அதுவும் இல்ல.
ஒரு நாளைக்கு கொறஞ்சபட்சம் ஒரு ஆக்சிடென்ட், இந்த பாதாள சாக்கடை திட்டத்தால.............
டிவியா போட்டா ஸ்பெக்ட்ட்ரம் ........
வீடு ஒதுக்கிய பிரச்சினை.............
நிரா ராடியா........கனிமொழி...........ராசா............ராஜாத்தி அம்மா.............டாட்டா.........தாத்தா(கலைஞர்).....................
உருப்புடுவாங்க? இந்த நல்லவங்க எல்லாம்..................
இவங்க, தான் அழியறதோட மக்களையும் சேத்து அழிச்சிட்டாங்க....
மக்களுக்கு அந்த மழை நீர், சரியில்லாத ரோடு பத்தி எல்லாம் பெரிய கவலை இல்லாத மாதிரி தான் தெரிது..............
வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவ ரெடியா இருக்காங்க போல.
நெஞ்சு எரிஞ்சுது. மொத ஒரு வாரம்.
அதுக்கப்புறம்.......
நானும் அமைதியா இதுவும் கடந்து போகும்னு சொல்லிட்டு எம் மக்களை போலவே
" வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாவ " ரெடிஆயிட்டேன்.
பதினோரு மணிக்கு டாஸ்மாக்கில் கள்ள சரக்கு வாங்கி குடிச்சிட்டு மீதி நாட்களை கடந்து வெற்றிகரமாக விடுமுறை கழித்து வாகையுடன் திரும்பி விட்டேன்.........
ஊரில் நல்ல ரோடு போட முடியாத குறையை கத்தாரில் போக்கி கொண்டிருக்கிறேன்.
அனுபவமா........சிறுகதையா............வயித்தெரிச்சலா............எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்..........
வேதனையுடன்
----லகுட பாண்டி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக